கோவை மாநகரில் விபத்தினை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வாகனத் தனிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத்தனிக்கையின் போது தொடர்ச்சியாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.-க்கு காவல்துறை தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து வார இறுதி நாட்களில் இந்த வாகனத்தனிக்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வாகனத் தனிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத்தனிக்கையின் போது தொடர்ச்சியாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.-க்கு காவல்துறை தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து வார இறுதி நாட்களில் இந்த வாகனத்தனிக்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.