மது போதையில் வாகனம் ஓட்டிய 1500 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது - போக்குவரத்து துணை ஆணையர் துரை தகவல்

கோவை மாநகரில் விபத்தினை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வாகனத் தனிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத்தனிக்கையின் போது தொடர்ச்சியாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.-க்கு காவல்துறை தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வார இறுதி நாட்களில் இந்த வாகனத்தனிக்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...