கோவை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களின் கல்வி நலனுக்காக, சின்னாம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி இடைநிலை ஆசிரியை காலியாக உள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இது ஒப்பந்த முறையில் முற்றிலும் தற்காலிகமான தொகுப்பூதியத்தில் நிரப்புதல் ஆகும். இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 2017 ஆகஸ்ட் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேர்வு வரும் ஆகஸ்ட் 31ம் தேதியன்று சென்னை பழங்குடியினர் நல இயக்குநர் குறிப்பிடும் இடத்தில் நடத்தப்படும்.
எனவே, இதற்கு சரியான தகுதியை பெற்றுள்ள பழங்குடியினர் நல இனத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள், இத்துடன் இரண்டு புகைப்படங்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்.
மேலும், இதில் விண்ணப்பித்து தகுதித் தேர்விற்கு வருவோர் டி.டீ.அடி சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பின் பட்டய சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றியிருப்பின் முன் அனுபவச் சான்று, வேலை வாய்ப்பக பதிவு அட்டை உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.
இது ஒப்பந்த முறையில் முற்றிலும் தற்காலிகமான தொகுப்பூதியத்தில் நிரப்புதல் ஆகும். இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 2017 ஆகஸ்ட் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேர்வு வரும் ஆகஸ்ட் 31ம் தேதியன்று சென்னை பழங்குடியினர் நல இயக்குநர் குறிப்பிடும் இடத்தில் நடத்தப்படும்.
எனவே, இதற்கு சரியான தகுதியை பெற்றுள்ள பழங்குடியினர் நல இனத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள், இத்துடன் இரண்டு புகைப்படங்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்.
மேலும், இதில் விண்ணப்பித்து தகுதித் தேர்விற்கு வருவோர் டி.டீ.அடி சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பின் பட்டய சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றியிருப்பின் முன் அனுபவச் சான்று, வேலை வாய்ப்பக பதிவு அட்டை உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.