மின்சார வேலிகளால் தொடரும் யானை உயிரிழப்புகள்

நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே கடந்த இரு நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தன. குட்டி யானை ஒன்று, இறந்த தாயை எழுப்ப துடித்தது அதனைக் கண்டோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின் உயிரிழந்த யானைகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அதேப் பகுதியில் புதைத்தனர். ஆனால், அப்பகுதியில் இருந்த செல்ல மறுத்து அந்த குட்டியானை அங்கேயே சுற்றி வந்தது. தொடர்ந்து, அதனை வேறு யானைக் கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

இதனிடையே, அதிக மின்சாரம் தாக்கியே அந்த இரு யானைகளும் உயிரிழந்துள்ளது எனக் கண்டறித்த வனத்துறையினர் தொடர்ந்து தலைமறைவாகவுள்ள நில உரிமையாளரை தேடி வருகின்றனர். 

பொதுவாக, இதுபோன்று வனப்பகுதிகளின் அருகே அமைந்துள்ள தனியார் தோட்டங்களில் மின்சார வேலி அமைப்பது யானைகளை குறிவைத்து அல்ல. அவை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்கவே. 

சட்டப்படி, காட்டுப்பன்றிகளை இவ்வாறு கொலை செய்வதும் ஒரு வகை வேட்டையே. தண்டனைக்குறிய செயல். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பெரும்பாலான கிராமங்களில் இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் காட்டுப் பன்றிகளை ஓரிருவர் இணைந்து அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். பெரிதாக வெளியில் தெரிவதில்லை. ஆனால், உடலளவில் பெரிய விலங்கான யானைகள் இவ்வாறான மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கும் போது அதனை அப்புறப்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களால் அவை எளிதில் வெளியில் தெரியவருகிறது.

இதில் குறிப்பாக கவணிக்கப்பட வேண்டியவை என்றால் மின்சார வேலிகள் அமைக்கும் போது பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளில் தொடர்ந்து மின்சாரம் பாயாதவாறு முறைப்படுத்த வேண்டும். ஆனால் இதனை நில உரிமையாளர்கள் பின்பற்றாததே யானை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கக் காரணம். 

துரதிருஷ்டவசமாக, யானைகள் இதுபோன்ற மின்சார வேலியில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், சில உரிமையாளர்கள் காட்டுப்பன்றி உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதற்காக வைக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகளில் சிக்கி யானைகளும் உயிரிழப்பது தொடர்கதையாகத்தான் உள்ளது. 2016-ல் மட்டும், ஆறு யானைகளுக்கு மேல் இதுபோன்ற நாட்டு வெடி குண்டுகளினால் பாதிக்கப்பட்டுள்ளன. கொடூரமாக உயிரிழந்தும் உள்ளன.

இனிவரும் காலங்களினேலும், மனித- விலங்குகளுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஏனெனில், மனிதர்கள் கூட சமீப காலங்களில் இத்தகைய வேலிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற முறையற்று செயல்படும் வன்முறையாளர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கும், மனித- விலங்கு மோதல்களுக்கும் ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கான முறைகளை அதிகாரிகள் அதிக அளவில் பின்பற்ற வேண்டும். மனிதர்களும் விலங்குகளிடத்தில் கவணம் கொள்ள வேண்டும்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...