இந்தியாவில் மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொள்வதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் "கொன்றது ஆர்.எஸ்.எஸ் நான் சாட்சி" என்ற முழக்கத்தை முன்வைத்து கொடூர கொலைகளுக்கு எதிரான இந்தியா என்ற தலைப்பில் தேசம் தழுவிய பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் வைத்து இந்தியாவில் மாட்டின் பெயரால் நடைபெறும் கொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று சாட்சி பகரும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட்டின் கோவை மாவட்ட தலைவர் கே.பீர் முஹம்மது தலைமை தாங்கினார். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில பொதுச் செயலாளர் எல்.அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட்-யின் மாநில பொருளாளர் என்.எம்.ஷாஜஹான், நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆயிஷா சித்திகா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இப்போராட்டத்தில் மாட்டின் பெயரால் நடைபெறும் அனைத்து கொலைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என கோசங்கள் எழுப்பப்பட்டன. சாட்சி பகரும் விதமாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பொது மக்களும் கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக சாட்சி கூறினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் வைத்து இந்தியாவில் மாட்டின் பெயரால் நடைபெறும் கொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று சாட்சி பகரும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட்டின் கோவை மாவட்ட தலைவர் கே.பீர் முஹம்மது தலைமை தாங்கினார். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில பொதுச் செயலாளர் எல்.அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட்-யின் மாநில பொருளாளர் என்.எம்.ஷாஜஹான், நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆயிஷா சித்திகா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இப்போராட்டத்தில் மாட்டின் பெயரால் நடைபெறும் அனைத்து கொலைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என கோசங்கள் எழுப்பப்பட்டன. சாட்சி பகரும் விதமாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பொது மக்களும் கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக சாட்சி கூறினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.