வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை குறைவாக காணப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரிரு நாட்கள் பெய்த மழையினால் ஒரு சில ஆறுகளில் நீர்ஓட்டம் அதிகரித்தது.
இந்நிலையில், தற்போது கடந்த இரு நாட்களாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மிக அதிகமான மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்நிலைப்பகுதியான நடுமலை ஆறு, பிர்லா பால்ஸ், வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் 160 முழு கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தற்போது கடந்த இரு நாட்களாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மிக அதிகமான மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்நிலைப்பகுதியான நடுமலை ஆறு, பிர்லா பால்ஸ், வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் 160 முழு கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடியாக உயர்ந்துள்ளது.