கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது -நடிகர் சீமான்

கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டக் கூடாது என தமிழகத்தில் அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழகறிஞர் அணைகட்ட ஒப்புதல் கொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; 

அதிமுக இணைப்பே நாட்டுக்கு பிரச்சினையல்ல எனவும் இதையே பேசிக்கொண்டு இருப்பது அருவருப்பானது என தெரிவித்தார். கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டக் கூடாது என தமிழகத்தில் அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழகறிஞர் அணைகட்ட ஒப்புதல் கொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது எனவும், பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தொடந்து தடுப்பு அணைகளை கட்டி வருகின்றது. இதனால் தமிழகம் பாலைவனம் ஆகும் நிலையில் அதிமுக இணைப்பு பற்றி பேசிக்கொண்டு இருப்பது சரியல்ல எனவும் அவர் தெரிவித்தார். 

நீட் விவகாரத்தில் பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்படுவதை மட்டும் பேசவேண்டும் என்றவர் நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது என தெரிவித்தவர். 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வலுவான வாதத்தினை முன் வைக்க தவறி விட்டது எனவும், தமிழகம் பெரு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறி வருகின்றது எனவும் தெரிவித்தார். எங்களுக்கு ரஜினி, கமல் தேவையில்லை. காமராஜரும், ஜீவானந்தமும், சிங்காரவேலர் போன்ற தலைவர்கள் தலைவர்கள் விரைவில் உருவாவர்கள் என்று தெரிவித்தார். 

சென்னையில் ரஜினிகாந்த் மனைவி ஆஸ்ரம் பள்ளியில் நடந்தை செய்தியாக கூட ஊடகங்கள் போடவில்லை எனவும், ரஜினிகாந்த் ஆஸ்ரம் பள்ளிக்கு போட்ட பூட்டை முதலில் திறக்கட்டும் பின்னர், நாட்டை காப்பாற்ற ரஜினிகாந்த் வரட்டும் என தெரிவித்தார்.

ஒரு தலைமுறை கோபமாக அரசை பார்த்துக்கொண்டு இருக்கின்றது என்றவர். மெரினாவில் எம்,ஜி.ஆர் சிலை இருக்கிறது, தமிழன் சிவாஜி கணேசன் சிலையை ஏதேதோ காரணம் சொல்லி எடுக்கின்றனர் எனவும் சீமான் குற்றம்சாட்டினார்.

மேகதாது பகுதியில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை அதிர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் இருக்கின்றது என கூறியவர் மேகதாது விவகாரத்தில் அரசின் செயல்பாடு சரியில்லை என குற்றம் சாட்டினார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...