கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெற்ற கடன்கள், வட்டி சலுகைகள் மற்றும் கடன் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளதாவது:-
10.01.2017 அன்று தமிழ்நாடு அரசு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்தது. வறட்சியால் பாதிக்கப்பட்டதால் பாரத ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண நடவடிக்கைகளான கடன்களுக்கு வட்டி சலுகைகள், கடன் கால நீட்டிப்பு செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சலுகைகளை பெற விவசாயிகள் தங்கள் கடன் பெற்ற வங்கிகளை உடனடியாக அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புடைய வங்கியில் 31.08.2017-க்குள் பாரத ரிசர்வ் வங்கியின் விதிகளுக்குட்பட்டு விவசாயிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளதாவது:-
10.01.2017 அன்று தமிழ்நாடு அரசு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்தது. வறட்சியால் பாதிக்கப்பட்டதால் பாரத ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண நடவடிக்கைகளான கடன்களுக்கு வட்டி சலுகைகள், கடன் கால நீட்டிப்பு செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சலுகைகளை பெற விவசாயிகள் தங்கள் கடன் பெற்ற வங்கிகளை உடனடியாக அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புடைய வங்கியில் 31.08.2017-க்குள் பாரத ரிசர்வ் வங்கியின் விதிகளுக்குட்பட்டு விவசாயிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.