மாநகராட்சி ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல உதவி ஆணையர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் மண்டல சுகாதார அலுவலர்களைக் கொண்டு கட்டுமான தளங்கள் மற்றும் காலியாக உள்ள தளங்களை ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சியில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 28 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக திருச்சி ரோடு, ஏர்போர்ட் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், தேவையான இடங்களில் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்துதல் மற்றும் தேவையற்ற பொருட்களை (பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் கப்புகள்;) உடனடியாக அப்புறப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.8000 அபராதம் விதிக்கப்பட்டது.

வடக்கு மண்டலத்தில், 4, 27, 41, 29 மற்றும் 55 வார்டுக்குட்பட்ட 25 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக விஸ்வநாதபுரம், முருகன் நகர், சின்னவேடம்பட்டி, மணியம் நகர், எம்.ஜி.ஆர் நகர் இரத்தினபுரி ஆகிய பகுதியில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 42 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பி.எம்.சாமி காலனி, ராம் நகர், புளியகுளம், கெம்பட்டி காலனி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். இந்த மண்டலத்தில் முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 32 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பாரதி பார்க், எஸ்.பி.காலனி, அழகேசன் ரோடு, ஜெயலட்சுமி நகர், வெங்கிடகிருஷ்ணா ரோடு, மணியம் காளியப்பன் வீதி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்கள் ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.6500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தெற்கு மண்டலத்தில் 89-வது வார்டுக்குட்பட்ட மருதம் நகரில் டெங்கு கொசு ஒழிப்புக்கு தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...