மாநகராட்சி ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல உதவி ஆணையர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் மண்டல சுகாதார அலுவலர்களைக் கொண்டு கட்டுமான தளங்கள் மற்றும் காலியாக உள்ள தளங்களை ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சியில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 28 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக திருச்சி ரோடு, ஏர்போர்ட் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், தேவையான இடங்களில் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்துதல் மற்றும் தேவையற்ற பொருட்களை (பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் கப்புகள்;) உடனடியாக அப்புறப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.8000 அபராதம் விதிக்கப்பட்டது.

வடக்கு மண்டலத்தில், 4, 27, 41, 29 மற்றும் 55 வார்டுக்குட்பட்ட 25 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக விஸ்வநாதபுரம், முருகன் நகர், சின்னவேடம்பட்டி, மணியம் நகர், எம்.ஜி.ஆர் நகர் இரத்தினபுரி ஆகிய பகுதியில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 42 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பி.எம்.சாமி காலனி, ராம் நகர், புளியகுளம், கெம்பட்டி காலனி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். இந்த மண்டலத்தில் முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 32 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பாரதி பார்க், எஸ்.பி.காலனி, அழகேசன் ரோடு, ஜெயலட்சுமி நகர், வெங்கிடகிருஷ்ணா ரோடு, மணியம் காளியப்பன் வீதி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்கள் ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.6500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தெற்கு மண்டலத்தில் 89-வது வார்டுக்குட்பட்ட மருதம் நகரில் டெங்கு கொசு ஒழிப்புக்கு தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...