கோவையில் தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

கோவையில் தொழிலதிபரிடம் 2.43 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜ்குமார் உத்திரவிட்டார்.

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு கணபதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேல் என்பவருக்கு கர்நாடக மாநிலத்தில் டெண்டர் எடுத்து தருவதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் 2.43 லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவர், ஏற்கனவே இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திஹார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவை இரண்டாவது குற்றவியல் நீதமன்றத்தில் மோசடி வழக்கு நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணைக்காக டெல்லியில் இருந்து இன்று சுகேஷ் சந்திரசேகர் அழைத்து வரப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று விசாரணையின் போது சுகேஷ் தரப்பில் இருந்து சில ஆவணங்கள் கோரப்பட்டதை அடுத்து, ஆவணங்களை சமர்பிக்க அரசு தரப்பில் காவல் அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை வருகின்ற 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் சுகேஷ் சந்திரசேகர் இரயில் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...