2017 ஆகஸ்ட் மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 24ம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முதன்மைக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.