தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஊக்க தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

தேசிய அளவிலான  விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும் ஊக்கத் தொகை பெற விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017- 2018 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கான விண்ணப்பங்களை வரும் 2017 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கக கோரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு 13,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-7-2016 முதல் 30-6-2017 முடியவுள்ள காலகட்டத்தில் தேசிய அளவிலான விளையாட்டில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். குழு போட்டிகளில் முதல் 2 இடங்களையும், தனியார் போட்டிகளில் முதல் 3 இடங்களையும் பிடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெற்ற வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகங்களில் 10 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்கள் 2017 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் கூடுதல் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தை 044- 28364322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...