சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகள் அடைக்கப்படுமென்று அரசு அறிவித்துள்ளது. இருந்தும் கோவையின் பல இடங்களில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
இது தொடர்பாக வந்த புகார்களை அடுத்து பீளமேடு, சரவணம்பட்டி, ஆர்.எஸ் புரம், ராமநாதபுரம் மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தடையை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தடையை மீறி மது விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைதானவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 129 மது பாட்டில்களையும் ரூ.600 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வந்த புகார்களை அடுத்து பீளமேடு, சரவணம்பட்டி, ஆர்.எஸ் புரம், ராமநாதபுரம் மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தடையை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தடையை மீறி மது விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைதானவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 129 மது பாட்டில்களையும் ரூ.600 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.