நாட்டின் பன்முக பண்பாடுகளை பேணிக்காக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமை துவங்கி வைப்பதற்காக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோவை வந்தார்.

அப்போது அவர்  செய்தியாளர்களிடம் பேசியதாவது :-  நாட்டின் 71-வது சுதந்திர நாளன்று வேற்றுமையில் ஒற்றுமை, மத நல்லிணக்கணம் மற்றும் நாட்டின் பன்முக பண்புகளை பேணி காப்பாற்ற உறுதியேற்க வேண்டும்.  



மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்பட தவறியதால் மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு ஓராண்டு விலக்கு அளிப்பது ஏற்புடையது அல்ல, நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.

அதிமுக 3 அணிகளும் பாஜக-விடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மதுரை கூட்டம் ஒரு நாடகம். பாஜக-வுக்கு யார் முதலில் கூஜா தூக்குவது என்பதற்காகவே அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு செயலிழந்து விட்டு கோமா நிலையில் உள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளைகளில் மக்கள் நலனை தமிழக அரசு காவு கொடுத்து வருகிறது. 

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழகத்தில் வலிமையான அரசு இல்லை என்பதால் காவிரியில் தண்ணீர் திறந்து விடமாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கூறியிருப்பதும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...