போதுமான வசதிகள் இன்றி நடத்தப்பட்ட சுதந்திர தின விழா- குடிநீர் கூட வழங்க மறுத்ததால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம்

நாட்டின் 71-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்று கொடி ஏற்றி வைத்து பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். காலை 8 மணி முதலே நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க பல்வேறு அச்சுத்துறை மற்றும் ஊடகங்களை சேர்ந்த நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அங்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் அதிகாரிகளை கவனிக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இதனால் அங்கு செய்தி மற்றும் புகைப்படம் எடுக்க வந்திருந்தவர்கள் கொடியேற்று விழா மற்றும் அணிவகுப்பு முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கபட்டிருந்த குடிநீரை கேட்க, உங்களுக்கு இங்கு வழங்க முடியாது என அங்கிருந்தவர்கள் கூறியதால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து செய்தி தொடர்பு அதிகாரியை தொடர்பு கொண்டு தெரிவித்த பின்னர் குடிக்க குடிநீரும்,தேனீரும் அளிக்கப்பட்டது.

இதனிடையே, வ.ஊ.சி பூங்காவினில் உள்ள மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் கழிவறைகள் மூடப்பட்டிருந்தது. விழா நடைபெறும் இடத்தின் அருகே உள்ள ஒரே ஒரு கழிவறையை மட்டுமே அங்கிருந்தவர்கள் உபயோகிக்க வேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்தியிருந்தனர். 

மேலும், அரசு சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழில் 71-வது சுதந்திர தின விழா என இல்லாமல் 70-வது சுதந்திர தின விழா நற்சான்றிதழ் என அச்சிடப்பட்டு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அரசு விழாக்களில் அதிக கவனம் எடுத்துப் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...