நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதைதொடர்ந்து, காவல்துறை மற்றும் மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டர்.

பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகள் 12 பேருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், பள்ளிக் கல்வி துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் துறை, வருவாய் துறை உட்பட 12 துறைதள் சார்பில் 549 பயனாளிகளுக்கு 14 கோடியே 99 லட்சத்து 45 ஆயிரத்து 254 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளையும் ஹரிஹரன் வழங்கினார்.

இதையடுத்து நடைபெற்ற மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர ஆணையர் அ.அமல்ராஜ், காவல் துறைத்தலைவர் (மேற்கு மண்டலம்) பாரி, மாநகர காவல் துணை ஆணையர் பி.எ.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் தேசபற்றாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.