இந்தியாவில் இரண்டு சதவிகிதம் மக்களே உடல் உறுப்புகளை தானம் பெறுகின்றனர்- கிஃப்ட் அன் ஆர்கன் திட்ட தலைவர் தகவல்

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் காத்திருந்தாலும், அவர்களில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே நன்கொடையாக உடல் உறுப்புகளை பெற முடிகின்றது என்று சங்கரா கண் மருத்துவமனை நிறுவனரும் கிஃப்ட் அன் ஆர்கன் திட்டத்தின் தலைவருமான மருத்துவர் ஆர்.வி.ரமணி தெரிவித்துள்ளார்.



உறுப்பு நன்கொடை தானம் குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் ஆர்.வி.ரமணி, உடல் உறுப்பு தேவைகள் இந்தியாவில் அதிகமாக இருந்தாலும், 5550 நோயாளிகள் மட்டுமே தற்போது உறுப்புகளை தானமாக பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், உறுப்பு தானம் குறித்து பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது பாராட்டக்குறியது. "கடந்த ஆண்டு மட்டும் 648 உறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.



சிஐஐ கோயம்புத்தூர் மற்றும் ஜெம் மருத்துவமனை பாரியாட்ரிக் கன்சல்டன்ட் மருத்துவர் பி.பிரவீன் ராஜ் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் தனியார் மருத்துவமனைகள் உட்பட 13 மருத்துவமனைகள் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

இதனைத்தொர்ந்து 'கிஃப்ட்டிங் லைப்' என்னும் கருத்தில் நடிகர் மற்றும் எழுத்தாளர் ஆர்.சிவக்குமார் பேசுகையில், தங்கள் உறுப்புகளை நன்கொடையாக வழங்குவதைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று கூறினார். காந்தி மற்றும் காமராஜர் உட்பட பல அறிஞர்கள் நாட்டிற்காக தங்களது வாழ்வையே பரிசாக அளித்துள்ளனர் என சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பேசுகையில், நாடு முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேவை அதிகரித்துள்ளது. மக்களிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்த வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்படும் என்றார்.



Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...