சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் இந்திரம், சலவை பெட்டி மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, விபத்து நிவாரண உதவித்தொகை என மொத்தம் 554 பயனாளிகளுக்கு ரூ.14.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்க உள்ளார்.
பின்னர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. பங்கு கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிசுகளும் வழங்க உள்ளார்.
எனவே, நமது மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
அதைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் இந்திரம், சலவை பெட்டி மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, விபத்து நிவாரண உதவித்தொகை என மொத்தம் 554 பயனாளிகளுக்கு ரூ.14.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்க உள்ளார்.
பின்னர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. பங்கு கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிசுகளும் வழங்க உள்ளார்.
எனவே, நமது மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.