கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சமத்தூர் இராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலை பள்ளியில் பாரதியார் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அ.கணபதி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாரதியார் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கைச்சான்று, வேளாண்மைத்துறையின் மூலம் தென்னை மறுநடவு மற்றும் புத்துணர்வு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மானியத்துடன் தென்னைக்கன்று, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 6 பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வீ.சி.ஆறுகுட்டி, எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் (பொ) கலா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தமிழக சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அ.கணபதி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாரதியார் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கைச்சான்று, வேளாண்மைத்துறையின் மூலம் தென்னை மறுநடவு மற்றும் புத்துணர்வு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மானியத்துடன் தென்னைக்கன்று, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 6 பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வீ.சி.ஆறுகுட்டி, எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் (பொ) கலா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.