கோவை மாநகராட்சி ஆணையர் எழுதிய புத்தகம் ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வில் வெளியானது

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எழுதிய புத்தகம் சனிக்கிழமையன்று அவரது தாயார் உமா கண்ணன் நினைவாக ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வில் வெளியிடப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எழுதிய இரண்டாவது புத்தகம் "அதுவும் இதுவும்". இதனை விஜயா பதிப்பகம் பதிவிட்டுள்ளது. முன்னதாக, கோவில்பட்டி நகரில் துணை ஆட்சியராக இவர் பணியாற்றியபோது இவரது முதல் புத்தகம் வெளியிடப்பட்டது.



அரசு வேலை தொடர்பான அந்த முதல் புத்தகத்தினை விகடன் பதிப்பகம் வெளியிட்டது. 

விஜயகார்த்திகேயன் அவர்களின் தந்தை வன (நிர்வாகம்) கூடுதல் முதன்மை தலைமை ஆலோசகர், ஆர்.கண்ணன் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, தனது மகனின் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை விவரிக்கும் வகையில் உண்மை சம்பவங்களை விளக்கும் வகையில் இப்புத்தகம் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் மற்றும் கலைஞரான சிவக்குமார் வாழ்வில் முக்கிய 14 அம்சங்களை விளக்கினார். 



இதனைத்தொடர்ந்து, பேசிய சிறுதுளி வனிதா மோகன், க.விஜயகார்த்தியேன் அவர்களையும், அவரது புத்தகம் குறித்தும் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், விஜயகார்த்திகேயன், மக்களை பல்வேறு விஷயங்களில் முன்னேற்றி வருவதாகவும், கற்றலை ஊக்கப்படுத்தி வருவதாகவும் வாழ்த்தி பேசினார்.

இதனை அடுத்து பேசிய க.விஜயகார்த்திகேயன், தனது நேரத்தை செலவழிப்பதற்கான ஒரு சிறந்த வழி புத்தகம் எழுதுவது என்றும், அந்த புத்தகம் பிறருக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் எழுதியதும் குறித்து விவரித்தார். தொடர்ந்து, இதுபோன்ற செயல்களில் மக்களும், படைப்பாளர்களும் ஈடுபடும்போது அவை மக்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறினார்.



மேலும், சமூகத்தில் உள்ள மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் இப்புத்தகத்தை எழுதியுள்ளதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...