தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக இருப்பதாகவும் அதிமுகவில் உள்ள மூன்று அணிகளும் கூட்டு கொள்ளையர்கள் என்றும் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-

அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, இன்று ஒருநாள் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம். 55 ஆண்டு கால கோரிக்கையான இத்திட்டம் நிறைவேற்றினால் 3 மாவட்டங்கள் பயன்பெறும். பவானி ஆற்று நீர் ஆண்டுக்கு 20 - 100 டி.எம்.சி கடலில் கலந்து வீணாகிறது. 1.2 டிஎம்சி தண்ணீரில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். வெறும் அறிவிப்போடு நிற்கும் இத்திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.
மத்திய அரசின் அடிமைகளாக தமிழக அரசு உள்ளது. இதனால், மாநில அரசின் உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் தற்போது உள்ள 3 அணியினரும் கூட்டுக் கொள்ளையர்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-

அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, இன்று ஒருநாள் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம். 55 ஆண்டு கால கோரிக்கையான இத்திட்டம் நிறைவேற்றினால் 3 மாவட்டங்கள் பயன்பெறும். பவானி ஆற்று நீர் ஆண்டுக்கு 20 - 100 டி.எம்.சி கடலில் கலந்து வீணாகிறது. 1.2 டிஎம்சி தண்ணீரில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். வெறும் அறிவிப்போடு நிற்கும் இத்திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.
மத்திய அரசின் அடிமைகளாக தமிழக அரசு உள்ளது. இதனால், மாநில அரசின் உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் தற்போது உள்ள 3 அணியினரும் கூட்டுக் கொள்ளையர்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.