கோயம்புத்தூர்- பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில்களுக்கான ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில் சேவைகள் 11.08.2017 மற்றும் 12.08.2017 ஆகிய தேதிகளில் சோதனை ஓட்டம் இயக்க, சேலம் பிரிவு, தெற்கு ரயில்வே பொறியியல் மற்றும் எலெக்ட்ரிக்கல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக கோயம்புத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை இடையே 2 பெட்டிகள் மற்றும் ஒரு ஜென்ரேட்டார் பெட்டி கொண்டு கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, 80கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. அப்போது பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது எந்த முக்கிய பிரச்சினையும் ஏற்படவில்லை என பொறியாளர்கள் தெரிவித்தனர். இந்த சோதனை ஓட்டத்தின் போது பொறியாளர்கள் எம் பிரபாகரன், நல்லமுத்து,மாணிக்கம், மாரியப்பன், மற்றும் எம் பூபதிராஜா ஆகியோர் இருந்தனர். 

இது குறித்து டிஆர்எம் சேலம், தெற்கு ரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வர்மா கூறுகையில், கோயம்புத்தூர்- பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில்களுக்கான ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. மேலும், டபுள் டக்கர் ரயில் மற்ற எட்டு பெட்டிகள் மற்றும் 2 ஜென்ரேட்டார் பெட்டிகள் தலைமையகத்தில் இருந்து விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றார். அனைத்து பெட்டிகளும் வந்த பின்னர் 100 கிமீ வேகத்தில் பொறியாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் உதவி மூலம் இயக்கப்படும் என்றார். அதன் பின் விரைவில் கோயம்புத்தூர்- பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...