விவசாயிகளின் நலன் கருதி, யானையை விரட்ட புதிய நவீன துப்பாக்கி அறிமுகம்

யானை மனித மோதல்கள், பயிர் சேதம் தவிர்ப்பதற்காக விவசாயிகள் கேட்கும் நவீன துப்பாக்கியை வழங்க தயாராகும் வனத்துறை. விவசாயிகள் கேட்பதைப் போல துப்பாக்கி உரிமம் வழங்க அரசு நிர்வாகிகள் மறுத்து வந்ததால், யானையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதியும், பயிர்கள் மற்றும் உயிரிழப்புகள் யானையால் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வனத்துறை புதிய துப்பாக்கி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வன விலங்குகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பைபர் குழாய் துப்பாக்கியின் செயல்பாடு பயன்பாட்டிற்கு எளிதாகவும், குறைவான விலையில் தயாரிக்க முடியும் என்ற காரணத்தால் தமிழக வனத்துறை கோவை பெரிய நாயக்கன்பாளையம் சரகத்திலுள்ள விவசாயிகளுக்கு இதை வழங்க இருக்கிறது.

பைபர் குழாய் துப்பாக்கி குறித்து வனத்துறையினர் கூறுகையில், பைபர் குழாயினுள் கார்பைடு கல் மற்றும் ஐந்து மில்லி நீர் ஊற்றி லைட்டரை கொண்டு பற்ற வைத்தால் வெடி சத்தமும், அழுகிய முட்டை போன்ற தூர் நாற்றமும் வெளிவருவதால், யானைகள் அங்கிருக்க முடியாமல் ஓடும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் யானையை விரட்ட பயன்படுத்தப்படும் பட்டாசுகள் மற்றும் ஆட்களின் செலவுகளை் குறைக்க வாய்புள்ளது என தெரிவித்தனர். 800 ரூபாயில் தயாரிக்கக் கூடிய இந்த தூப்பாக்கியை விவசாயிகள் எளிதாக வாங்கி பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...