நதிகள் இணைப்பு விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் -மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மகேஷ் சர்மா

நாட்டில் உள்ள ஆறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

கோவையில், விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தின் மீது பெரியளவில் மரியாதை உள்ளதாகவும், தமிழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிதாக கூறியவர், ஹைட்ரோகார்பன் திட்டம் எக்காரணத்திற்கு கொண்டும் திணிக்கப்படவில்லை என்றார். நதிகள் இணைப்பு படிப்படியாக செயல்பட்டு வருவதாக கூறியவர், விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்றார். 

முன்னதாக,கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 'வெள்ளையனே வெளியேறு' என்ற தலைப்பில் தமிழ்நாடு தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், சுத்தமான இந்தியா, வறுமையில்லா இந்தியா, ஊழலில்லா இந்தியா, பயங்கரவாதம் இல்லா இந்தியா, சாதி, மதவாதம் இல்லா இந்தியா என்கிற அம்சங்களின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டின் புதிய இந்தியாவின் இயக்கத்திற்கான மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

மேலும், இந்த 5 அம்சங்களையும் மாணவர்களுடன் இணைந்து அவரும் உறுதி ஏற்றுக்கொண்டார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...