குழப்பம் விளைவிப்பதில் அப்பாவிற்கு தப்பாத பிள்ளையாக செயல்படுகிறார் ஸ்டாலின் கோவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி



மதுரை மாவட்டம் மேலூரில் டி.டி.வி தினகரன் நடத்தும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ளவதா வேண்டாமா என்பது குறித்து முதல்வரிடம் கேட்டு முடிவு செய்யப்படும் என கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள உதகை செல்ல வந்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூட்டுறவு துறையின் செயல்பாடுகளை அனைத்து தரப்பினரும் பாராட்டுவதாக தெரிவித்தார். அதிமுக கட்சியானது பல்வேறு சோதனைகளை கடந்து வந்த கட்சி  எனவும், அதுபோல தற்போதைய சோதனைகளையும் கடந்து விரைவில் ஒன்றுபடும் எனவும் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்துடன் மக்களை சந்திக்கும் காலம் விரைவில் வரும் என தெரிவித்த அவர், அதிமுக தொண்டர்கள் குழம்பவில்லை எனவும் அதிமுக எம்.எல்.ஏ யாரும் மாற்று கட்சிக்கு அணி மாறவில்லை என்றவர் அனைவரும் நம்பிக்கையுடன் இருப்பதாக  தெரிவித்தார்.

மேலும், மேலூரில் டி.டி.வி தினகரன் நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொது கூட்டத்தில் கலந்து கொள்ள  வாய்ப்பிருக்கின்றதா என்பதை தற்போது சொல்ல முடியாது என கூறியவர் முதல்வரிடம் இது குறித்து கேட்டு முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதே தங்கள் எண்ணம் எனவும், சிலர் கோபதாபங்களில் பேசுவதை பெரிதாக்க கூடாது எனவும் தெரிவித்தார். குழப்பம் விளைவிப்பதில் அப்பாவிற்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் செயல்படுகின்றார் எனவும் எதிர்கட்சி தலைவராக செய்ய வேண்டியதை அவர் செய்கின்றார் எனவும் தெரிவித்தவர், நடிகர் கமல் பொதுவானவர் எனவும் அவர் வழி தவறி செல்வதை விரைவில் உணர்வார் என தெரிவித்தார். கமல் தனியாக கட்சி ஆரம்பித்தால் அவருக்கு பதில் சொல்லபடும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். நாட்டு மக்கள் குழம்ப வேண்டாம், நிச்சயம் அதிமுக ஒன்றிணையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...