கோவையில் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் இன்று தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டம் முழுவதும் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார பேரணிகள் நடத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு கிராமத்தையும் தூய்மை கிராமமாக மாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால்  ஏற்படும் நோய்கள், வருமான இழப்பு, மருத்துவ செலவு, குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்பு, ஆகியவற்றை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுதல் மற்றும் கழிப்பறை பயன்பாட்டினை பொதுமக்களிடத்தில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. பெண்களின் கௌவுரவத்தை காப்பதற்கும், மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களின் நலன் காத்திடவும் கழிப்பறை அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். நம் கிராமத்தை திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாற்றுதல் நம் ஒவ்வொருவரின் முயற்சியில் உள்ளது என தெரிவித்தார்.



முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகள் முழு சுகாதார தமிழகம்!!! - முன்னோடி தமிழகம்!!! என்ற உறுதிமொழியை சுகாதாரத்தை பேணி காத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...