கோவையில் இன்று வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த தந்தையின் உடலை மகன் தானமாக வழங்கிய சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், காளப்பட்டி அருகே உள்ள கைகோலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (82). இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மகனும், பி.யு.சி.எல் பொருளாளருமான சந்திரசேகர், தனது தந்தையின் உடலை தானமாக வழங்க முன்வந்தார்.
இதனைத்தொடர்ந்து, குடும்பத்தினர் சுப்ரமணியத்தின் உடலை புதைக்காமல் மருத்துவத்திற்கு பயன் பெறக் கூடிய வகையில் உடலை தானமாக அரசு மருத்துவ கல்லூரியில் ஒப்படைத்தனர்.
சுப்ரமணியத்தின் 2 கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும், உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காக அவரது மகன் சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் அசோகனிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம், காளப்பட்டி அருகே உள்ள கைகோலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (82). இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மகனும், பி.யு.சி.எல் பொருளாளருமான சந்திரசேகர், தனது தந்தையின் உடலை தானமாக வழங்க முன்வந்தார்.
இதனைத்தொடர்ந்து, குடும்பத்தினர் சுப்ரமணியத்தின் உடலை புதைக்காமல் மருத்துவத்திற்கு பயன் பெறக் கூடிய வகையில் உடலை தானமாக அரசு மருத்துவ கல்லூரியில் ஒப்படைத்தனர்.
சுப்ரமணியத்தின் 2 கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும், உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காக அவரது மகன் சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் அசோகனிடம் ஒப்படைத்தனர்.