அடிப்படை திறமைகளை அதிகரிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் - அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர்

இன்றைய பள்ளி பாடத்திட்டத்தினால் மாணவர்களுக்கு அடிப்படை அறிவே இல்லாத நிலை இருப்பதாகவும், மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் அடிப்படை திறமைகளை அதிகரிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுமென அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய பாடத்திட்டம் வடிவமைத்தல் குறித்த மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:-

இன்றைய பள்ளி பாடத்திட்டம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை தருவதாக உள்ளது. மற்ற மாநிலங்களில் பாடத்திட்டங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக  பாடத்திட்டம் மேம்படுத்தாமல் இருப்பதால் மேல்படிப்பு மற்றும் நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இன்றைய பள்ளி பாடத்திட்டத்தினால் மாணவர்களுக்கு அடிப்படை அறிவே இல்லாத நிலை உள்ளது. மாணவர்களின் தன்னம்பிக்கை, அடிப்படை திறமைகளை அதிகரிக்கும் வகையிலும், வருங்கால தொழில்நுட்ப, சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இவ்வாறு அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...