தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டமும், பொள்ளாச்சி லிபர்ட்டி அரிமா சங்கமும் இணைந்து குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு மற்றும் ஸ்லோகம் எழுதும் போட்டிகளை பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் கடந்த ஜூன் 22ம் தேதியன்று நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகஸ்ட் 10ம் தேதியன்று பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள மின்னல் மஹாலில் சார் ஆட்சியர் காயத்திரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் இயக்குனர் டி.வி.விஜயகுமார் வரவேற்றார்.

அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அசோக் சண்முக சுந்தரம், அரிமா ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லிபர்ட்டி அரிமா சங்க தலைவர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் பேசும் போது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வி கற்பதற்கான நல்ல சூழல் மற்றும் அரசின் சலுகைகள் அதிகமாக வழங்கப்படுகிறது. நல்ல வசதியான தரமான பள்ளி கட்டிடங்கள், நூலகம், சுற்றுச்சூழல், நல்ல முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட வசதிகள் கிடைத்துள்ளது மாணவ மாணவிகளுக்கு நல்ல வாய்ப்பாகும்.
பள்ளிப் பருவத்தில் தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் செயல்பட்டு கல்வி கற்றால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வர முடியும்.
வாழ்வில் நிகழக்கூடிய பல்வேறு செயல்களுக்கு நாம் மற்றவர்களை முன்னிறுத்தி காட்டுகிறோம். அப்படி இல்லாமல் ஒவ்வொரு செயலுக்கும் நாம் தான் காரணம் என்பதை உணர வேண்டும் என சார் ஆட்சியர் பேசினார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 900-மாணவ மாணவிகள், ஆசியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஓவியங்களை பார்வையிட்ட சார் ஆட்சியர் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். நிறைவாக தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் பீஜு அலெக்ஸ் நன்றி கூறினார்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகஸ்ட் 10ம் தேதியன்று பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள மின்னல் மஹாலில் சார் ஆட்சியர் காயத்திரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் இயக்குனர் டி.வி.விஜயகுமார் வரவேற்றார்.

அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அசோக் சண்முக சுந்தரம், அரிமா ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லிபர்ட்டி அரிமா சங்க தலைவர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் பேசும் போது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வி கற்பதற்கான நல்ல சூழல் மற்றும் அரசின் சலுகைகள் அதிகமாக வழங்கப்படுகிறது. நல்ல வசதியான தரமான பள்ளி கட்டிடங்கள், நூலகம், சுற்றுச்சூழல், நல்ல முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட வசதிகள் கிடைத்துள்ளது மாணவ மாணவிகளுக்கு நல்ல வாய்ப்பாகும்.
பள்ளிப் பருவத்தில் தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் செயல்பட்டு கல்வி கற்றால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வர முடியும்.
வாழ்வில் நிகழக்கூடிய பல்வேறு செயல்களுக்கு நாம் மற்றவர்களை முன்னிறுத்தி காட்டுகிறோம். அப்படி இல்லாமல் ஒவ்வொரு செயலுக்கும் நாம் தான் காரணம் என்பதை உணர வேண்டும் என சார் ஆட்சியர் பேசினார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 900-மாணவ மாணவிகள், ஆசியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஓவியங்களை பார்வையிட்ட சார் ஆட்சியர் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். நிறைவாக தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் பீஜு அலெக்ஸ் நன்றி கூறினார்.