நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை இரயில் பாதையின் அருகில் காட்டுமாடு இறந்து கிடப்பதாக வனதுறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அங்கு சென்று பார்த்த போது சுமார் 8 வயது மதிக்கத் தக்க ஆண் காட்டுமாடு இறந்து கிடந்தது.
இதனைத்தொடர்ந்து, குன்னூர் வனச்சரகர் பெரியசாமி முன்னிலையில் மருத்துவர் விஜயராகவன், மருத்துவர் ராஜமுரளி ஆகியோர் அருவை சிகிச்சை மேற்கொண்டனர். அதில், காட்டுமாடு நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, குன்னூர் வனத் துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் காட்டுமாட்டின் சடலத்தை வனப்பகுதிக்குள் புதைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, குன்னூர் வனச்சரகர் பெரியசாமி முன்னிலையில் மருத்துவர் விஜயராகவன், மருத்துவர் ராஜமுரளி ஆகியோர் அருவை சிகிச்சை மேற்கொண்டனர். அதில், காட்டுமாடு நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, குன்னூர் வனத் துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் காட்டுமாட்டின் சடலத்தை வனப்பகுதிக்குள் புதைத்தனர்.