நீலகிரி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பொதுநல சேவை சங்கத்தினர் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட காவல்துறை மற்றும் சிட்டிஸன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பு இணைந்து குன்னூர் க்ளப்பில் அனைத்து பொதுநல சேவை சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குன்னூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், குன்னூர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் பரமேஸ்வரன், சிட்டிஸன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பின் நிர்வாகி ஜெபரத்தினம், மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி உசேன், குன்னூர் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் உமர், டேனி, லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு கலந்துரையாடல் நடத்தினர்.



இந்த நிகழ்ச்சியில், பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வாகன ஓட்டுனர்களின் வாகன நிறுத்தப் பிரச்சனைகள் பற்றி உரையாற்றப்பட்டது. மேலும் "மல்டி லெவல் பார்கிங்" அமைத்தலின் நன்மைகள் குறித்தும், பள்ளி மாணவ, மாணவியருக்கு சாலைவிதிகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொது இடங்களில் வாகனங்கள் நிறுத்துவோருக்கு அபராதம் விதித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...