நீலகிரி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பொதுநல சேவை சங்கத்தினர் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட காவல்துறை மற்றும் சிட்டிஸன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பு இணைந்து குன்னூர் க்ளப்பில் அனைத்து பொதுநல சேவை சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குன்னூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், குன்னூர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் பரமேஸ்வரன், சிட்டிஸன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பின் நிர்வாகி ஜெபரத்தினம், மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி உசேன், குன்னூர் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் உமர், டேனி, லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு கலந்துரையாடல் நடத்தினர்.



இந்த நிகழ்ச்சியில், பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வாகன ஓட்டுனர்களின் வாகன நிறுத்தப் பிரச்சனைகள் பற்றி உரையாற்றப்பட்டது. மேலும் "மல்டி லெவல் பார்கிங்" அமைத்தலின் நன்மைகள் குறித்தும், பள்ளி மாணவ, மாணவியருக்கு சாலைவிதிகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொது இடங்களில் வாகனங்கள் நிறுத்துவோருக்கு அபராதம் விதித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...