உதகை சிஎஸ்ஐ சிஎம்எம் பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை ஆட்சியர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம், உதகை, சி.எஸ்.ஐ சி.எம்.எம் மேல்நிலைப்பள்ளியில் இன்று சுகாதாரத்துறையின் சார்பில், பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “நமது மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கம் தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் இம்மாதம் 10 மற்றும் 17ம் தேதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 543 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 167 தனியார் பள்ளிகள் மற்றும் 486 அங்கன்வாடி மையங்களிலும் பயிலும் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை மதிய உணவிற்குப் பிறகு ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மி சிரப் மற்றும் 2 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு ஒரு முழு மாத்திரையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 10-ம்தேதி பள்ளிக்கு வராத விடுபட்ட மாணவ, மாணவியருக்கு இம்மாதம் 17ம் தேதி குடற்புழுநீக்கும் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரத்த சோகையை தடுக்கும் இந்த தேசிய குடற்புழு நீக்கும் திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் மொத்தம் 1,42,225 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர்.” என்றார். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதிமொழிக்கேற்ப மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற மருத்துவ முகாம்களை பயன்படுத்தி தங்கள் உடல் நலத்தினை நோய்வாய்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி திறந்தவெளியில் மலம் கழித்தல் தீமையினை தங்கள் பெற்றோருக்கும், உறவினருக்கும், தங்கள் சுற்றுத்தாருக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் மாணவ, மாணவியர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு கருத்து பொது கருத்தாக எதிரொலிக்கும்.

அதேபோல உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று நோயினை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பணக்கஷ்டம் ஏற்பட்டால்கூட பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் நம்மில் ஒழுக்கம் கெட்டுப்போனால் வாழ்க்கையே கெட்டுபோய்விடும். எனவே இன்றைய மாணவ, மாணவியர்கள் இச்சமுதாயத்தின் எதிர்கால தூண்கள் என்பதை நினைவிற்கொண்டு ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” எனப் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...