நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், பாரிஸ் ஹாலில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்மனுநீதி நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு ரூ.2,67,000 மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 48 குடும்ப அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 14 பயனாளிகளுக்கு 14,05,000 வேளாண் விவசாய கடனுதவியும், சேரம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.18,96,000 விவசாய கடனுதவியும், 3 நபர்களுக்கு விதவை சான்றிதழ்களும் ஆக மொத்தம் 114 பயனாளிகளுக்கு ரூ.35,68,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 535 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு அரசு துறைகளும் பொதுமக்களிடமிருந்து பெறும் மனுக்களை முக்கியத்துவம் கொடுத்து நிறை, குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு அறிவுறுத்தினார்.
இம்முகாமில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜென்மம் (நிலம்) பாண்டியன், உதவி ஆணையர் (கலால்) மற்றும் கூடலூர் கோட்டாட்சியர் (பொ) முருகன் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இம்மனுநீதி நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு ரூ.2,67,000 மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 48 குடும்ப அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 14 பயனாளிகளுக்கு 14,05,000 வேளாண் விவசாய கடனுதவியும், சேரம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.18,96,000 விவசாய கடனுதவியும், 3 நபர்களுக்கு விதவை சான்றிதழ்களும் ஆக மொத்தம் 114 பயனாளிகளுக்கு ரூ.35,68,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 535 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு அரசு துறைகளும் பொதுமக்களிடமிருந்து பெறும் மனுக்களை முக்கியத்துவம் கொடுத்து நிறை, குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு அறிவுறுத்தினார்.
இம்முகாமில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜென்மம் (நிலம்) பாண்டியன், உதவி ஆணையர் (கலால்) மற்றும் கூடலூர் கோட்டாட்சியர் (பொ) முருகன் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.