மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீலகிரி ஆட்சியர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், பாரிஸ் ஹாலில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்மனுநீதி நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு ரூ.2,67,000 மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 48 குடும்ப அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 14 பயனாளிகளுக்கு 14,05,000  வேளாண் விவசாய கடனுதவியும், சேரம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.18,96,000 விவசாய கடனுதவியும், 3 நபர்களுக்கு விதவை சான்றிதழ்களும் ஆக மொத்தம் 114 பயனாளிகளுக்கு ரூ.35,68,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 535 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு அரசு துறைகளும் பொதுமக்களிடமிருந்து பெறும் மனுக்களை முக்கியத்துவம் கொடுத்து நிறை, குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு அறிவுறுத்தினார்.

இம்முகாமில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜென்மம் (நிலம்) பாண்டியன், உதவி ஆணையர் (கலால்) மற்றும் கூடலூர் கோட்டாட்சியர் (பொ) முருகன் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...