கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் இருந்து தற்போது வரையிலான பல்துறை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய கட்டிடத்திற்கு பதிவறை மாற்றப்படும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பழைய பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பழைய ஆவணங்கள் தொடர்பாகவும் அவர்கள் பதிவறை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.
மாநகர காவல் துறை சார்பில் காவலர்கள் கிளப் ஹேமில்டன் கிளப் என்னும் பெயரில் இரயில் நிலையம் முன்பாக செயல்பட்டு வருகிறது. புணரமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு ஆவணங்களின் நகல்களை எடுத்து செல்வது தொடர்பாக இந்த ஆய்வு நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் இருந்து தற்போது வரையிலான பல்துறை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய கட்டிடத்திற்கு பதிவறை மாற்றப்படும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பழைய பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பழைய ஆவணங்கள் தொடர்பாகவும் அவர்கள் பதிவறை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.
மாநகர காவல் துறை சார்பில் காவலர்கள் கிளப் ஹேமில்டன் கிளப் என்னும் பெயரில் இரயில் நிலையம் முன்பாக செயல்பட்டு வருகிறது. புணரமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு ஆவணங்களின் நகல்களை எடுத்து செல்வது தொடர்பாக இந்த ஆய்வு நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.