71வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டதின் ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்ற
இந்திய விமான படையினரின் இசை நிகிழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில்
ஆழ்த்தியது.


இந்திய நாட்டின் 71வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாடு
முழுவதும் கோலகலமாககொண்டாட ஆயத்தமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய
விமானபடையின் சூலூர் விமானப்படை தளத்தை சேர்ந்த 28 பேர் கொண்ட இசைக்குழு
கோவையில் உள்ள புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. ஸ்குவாட்ரன்
லீடர் பி.என்.அசோக் தலைமையிலான குழுவினர் டிரம்பட், புளூட், சாகஸ்சபோன்,
கிட்டார் உள்ளிட்ட பல்வேறு இசைகருவிகளை இசைத்தனர். தேச பக்தியை
பறைசாற்றும் வகையில் இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 23 பாடல்களை
இசைக்குழுவினர் இசைத்தனர். இதனை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்
பரவசத்துடன் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியில் விமானப்படையை சேர்ந்த
அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
