கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 37-வது வார்டுக்குட்பட்ட அவிநாசி சாலை, ஹோப் காலேஜ், பி.ஆர்.புரம் அருகில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.