மனிதர்களுக்கு மட்டுமல்ல, இனி மாடுகளுக்கும் ஆதார்! கோவையில் துவக்கம்


கோவையில் முதல் முறையாக மனிதர்களுக்கு ஆதார் எண் போல மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 3 வண்ணங்களில் 3 வகையான ஒரு லட்சம் மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மனிதர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுவது போல மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் முதல் முறையாக கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளின் விபரங்களை சேகரித்து அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், இதனை கால்நடைகளுக்கான மருத்துவ அட்டையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாடுகளுக்கு 12 இலக்க எண் மற்றும் மாட்டின் இனம், வயது, உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடையாள அட்டையில் இடம் பெறுகின்றன. கோவை மாவட்டத்தில் கால்நடை மருந்தகம், மருத்துவமனை உள்ளிட்ட 105 மையங்களில் இப்பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கலப்பின மாடு, நாட்டின மாடு, எருமை ஆகியவற்றிற்கு 3 வண்ணங்களில் 3 வகையான அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோவை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராமசந்திரன் கூறும்போது, கோவை மாவட்டத்தில் ஒரு வருட காலத்திற்குள் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த அட்டை மாடுகளை கண்காணித்தல், மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்குதல், மருத்துவ காப்பீட்டிற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றிக்கு உதவும் என தெரிவித்தார்.

விவசாயி கோவிந்தன் கூறும்போது, மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவை குறித்து மருத்துவர்கள் கண்காணிக்கவும், மருத்துவ வசதிகள் வழங்கவும் இந்த அட்டை பயன்படும். இது வரவேற்கத்தக்கது என்றார்.

மாடுகளை இறைச்சிக்காக சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு கொண்டு வந்த விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாடுகளை கண்காணிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...