கடந்த ஜூலை மாதம் 9ம் தேதியன்று ரயில் நிலையத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரயில்வே காவல்துறையின் சார்பில் பாராட்டும், வெகுமதியும் வழங்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்: 12695) சரோஜா எனும் பயணி கடந்த ஜூலை 9ம் தேதியன்று பயணித்துள்ளார். அப்போது, அந்த ரயிலில் 12 பவுன் நகை, பான், ஏடிஎம், ஆதார் அட்டை, கைபேசி உள்ளிட்டவற்றை சரோஜா தவரவிட்டுள்ளார்.
இதனிடையே, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி செந்தில் குமார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாலிபர் ஓடியுள்ளார். இதனைத்தொடர்ந்து, காவலர் செந்தில் குமார் அவரை துரத்திச் சென்ற நிலையில் ரயில் நிலையத்தின் முன்பு இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகியோர் அந்த நபரை வழிமறித்து பிடித்து காவல்துறை அதிகாரியிடம் ஒப்பத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அந்த வாலிபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த அஜித் என்பதும், ஐடி படிப்பு முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு உள்ளது என்னும் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ரயில்வே ஐஜி பொன்மாணிக்கம் ஆணையின் பெயரில் ரயில் நிலையத்தில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களை கவுரவிக்கும் விதமாக ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாயினை ரயில்வேத் துறை டிஎஸ்பி குணசேகரன் வழங்கினார். மேலும், காவலர் செந்தில்குமாருக்கு 3 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
முன்னதாக, ரயிலில் நகை மற்றும் கைபேசியை தவறவிட்ட சரோஜா ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து, பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்: 12695) சரோஜா எனும் பயணி கடந்த ஜூலை 9ம் தேதியன்று பயணித்துள்ளார். அப்போது, அந்த ரயிலில் 12 பவுன் நகை, பான், ஏடிஎம், ஆதார் அட்டை, கைபேசி உள்ளிட்டவற்றை சரோஜா தவரவிட்டுள்ளார்.
இதனிடையே, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி செந்தில் குமார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாலிபர் ஓடியுள்ளார். இதனைத்தொடர்ந்து, காவலர் செந்தில் குமார் அவரை துரத்திச் சென்ற நிலையில் ரயில் நிலையத்தின் முன்பு இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகியோர் அந்த நபரை வழிமறித்து பிடித்து காவல்துறை அதிகாரியிடம் ஒப்பத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அந்த வாலிபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த அஜித் என்பதும், ஐடி படிப்பு முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு உள்ளது என்னும் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ரயில்வே ஐஜி பொன்மாணிக்கம் ஆணையின் பெயரில் ரயில் நிலையத்தில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களை கவுரவிக்கும் விதமாக ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாயினை ரயில்வேத் துறை டிஎஸ்பி குணசேகரன் வழங்கினார். மேலும், காவலர் செந்தில்குமாருக்கு 3 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
முன்னதாக, ரயிலில் நகை மற்றும் கைபேசியை தவறவிட்ட சரோஜா ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து, பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.