நீலகிரி வின்டேஜ் கார் சங்கம் சார்பில் 13-வது ஆண்டு பழங்கால கார் அணிவகுப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த பழங்கால கார்களின் அணிவகுப்பில் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கார்கள் கூட கம்பீரமாக வந்து பார்வையாளர்களை கவர்ந்தன.



நீலகிரி மாவட்டம், வின்டேஜ் கார் சங்கம் சார்பில் 13-வது ஆண்டு பழங்கால கார் அணிவகுப்பு உதகையில் நடந்தது. உதகை தமிழகம் மாளிகை சாலையில் துவங்கிய அணிவகுப்பை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த கார்கள் அணிவகுப்பில் கன்னியாகுமரியில் இருந்து ஓட்டி வரப்பட்ட டாட்ஜ் பிரதர்ஸ் வாகனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. இது 1931-யில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இக்காலத்து கேரவன் வாகனம் போன்று அந்த வாகனத்தில் அமர, உறங்க, ஓய்வெடுக்க என பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நீலகிரி மாவட்ட வின்டேஜ் கார் சங்கத் தலைவர் ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், "முந்தைய ஆண்டுகளில் பழங்கால கார்களை வீடுகளின் வாசலில் கவுரவத்திற்காக நிறுத்தி வைக்கும் நிலை தற்போது மாறி இருக்கிறது. கன்னியாகுமரி, கேரளா, காரைக்குடி, பெங்களூருவில் இருந்து கூட பழங்கால வாகனங்களை அதன் உரிமையாளர்கள் ஓட்டி வந்துள்ளனர். இந்த பழங்கால கார்களின் மவுசு அதிகரித்தி உள்ளது" என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...