ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு வீடுகள் மற்றும் நிறுவனங்களின் பாதாள சாக்கடையை இணைக்க உத்தரவு

கோவை, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்துக்கு சுற்றுவட்டார பகுதியில் 1,500 பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கோவை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கழிவு நீர் சாலையில் செல்லாமல் இருக்கவும், குளத்தில் கலக்காமலும், வடிகாலில் மழை நீர் மட்டுமே செல்லும் வகையில் கட்டுமானம் செய்ய வேண்டும். அத்தகைய ஏற்பாடு செய்யும்போது கொசு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் பழைய மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு உக்கடம், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

கோவையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ஹோப் காலேஜ் முதல் சிங்காநல்லுார் வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சி ரோட்டில் அல்வேர்னியா கான்வென்ட் முதல் ஒண்டிப்புதூர் வரை, தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறத்தில் குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.5.25 கோடி செலுத்த வேண்டும். மாநகராட்சியில் நிதி இல்லாததால், இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என திருத்திய மதிப்பீடு தயாரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

தற்போது, உக்கடத்தில் கட்டுமான பணி முடிந்து கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. நஞ்சுண்டாபுரத்தில் சுத்திகரிப்பு மையம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஒண்டிப்புதூரில் நாளொன்றுக்கு 6 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் திறனுள்ள மையம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, ஒரு கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படுகிறது.

ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சோதனை ஓட்டம் முடிந்து விட்டதால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள சூழலில் எந்தெந்த பகுதிகளில் இணைப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என பொறியியல் பிரிவினருடன் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, மையத்தின் சுற்றுவட்டார பகுதியில் 1,500 இணைப்புகள் வழங்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Newsletter

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...