அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு வரும் 10-ம் தேதி துவக்கம்

தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையால் நடத்தப்பட உள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கடந்த 1998-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் 41-வது மாநாடு கோவை அரசு மருத்துவமனைக்கல்லூரியில் நடத்தப்படுகிறது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புற்றுநோய் மையத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்று 14-ம் தேதி நிறைவடைகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 600 மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டின் மூலம், இளம் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள தயக்கங்களை களைவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். போதுமான மருத்துவர்கள் இருந்தும் அவர்கள் பணியினை முழுமையாக செய்ய போதுமான தொழில் நுட்ப வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதனை சரி செய்ய தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...