தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையால் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கடந்த 1998-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் 41-வது மாநாடு கோவை அரசு மருத்துவமனைக்கல்லூரியில் நடத்தப்படுகிறது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புற்றுநோய் மையத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்று 14-ம் தேதி நிறைவடைகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 600 மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டின் மூலம், இளம் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள தயக்கங்களை களைவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். போதுமான மருத்துவர்கள் இருந்தும் அவர்கள் பணியினை முழுமையாக செய்ய போதுமான தொழில் நுட்ப வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதனை சரி செய்ய தீர்மானங்கள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கடந்த 1998-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் 41-வது மாநாடு கோவை அரசு மருத்துவமனைக்கல்லூரியில் நடத்தப்படுகிறது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புற்றுநோய் மையத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்று 14-ம் தேதி நிறைவடைகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 600 மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டின் மூலம், இளம் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள தயக்கங்களை களைவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். போதுமான மருத்துவர்கள் இருந்தும் அவர்கள் பணியினை முழுமையாக செய்ய போதுமான தொழில் நுட்ப வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதனை சரி செய்ய தீர்மானங்கள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.