விவசாயிகள் கடனை ரத்து செய்யாத அதிமுக அரசைக் கண்டித்து ஆக.,16-யில் ஆர்ப்பாட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

விவசாயிகள் கடனை ரத்து செய்யாமல் இருக்கும் அதிமுக அரசைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக திமுக அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, விவசாயிகள் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் கடனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டும் அதை செயல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள அதிமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...