மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளிக்க வருவோர் மண்ணெண்னை உள்ளிட்ட எரிபொருட்களை எடுத்துவந்து உடலின் மேல் ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில் தற்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைபவர்களை கடும் சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளிக்க வருவோர் மண்ணெண்னை உள்ளிட்ட எரிபொருட்களை எடுத்துவந்து உடலின் மேல் ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில் தற்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைபவர்களை கடும் சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
