சமையல் கேஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருவதை வரும் மார்ச் மாதத்தோடு ரத்து செய்யப் போவதாக அறிவித்து உள்ளது. அதுபோல மாதம் தோறும் சிலிண்டருக்கான விலை 4 ரூபாய் உயர்த்தவும் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மகளிர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் கியாஸ் மானிய ரத்து செய்யும் கொள்கையை கண்டிக்கும் வகையில் மண் அடுப்பு மற்றும் விறகுகளுடனும், கியாஸ் சிலிண்டருக்கு பாடைகட்டியும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணியின் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
