கோவை ரயில் நிலைய முகப்பில் உதகை ரயில்: வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை

கோவை ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ரயில் நிலையத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

முன்னதாக ரயில் நிலையத்தின் முன்பு இருந்த பழைய முகப்பு அகற்றப்பட்டது. தற்போது அந்த இடத்தில் பழமையான உதகை ரயில் எஞ்சின் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.



1880-களில் உதகைக்கு மலைப்பாதை வழியே பயணித்த இந்த ரயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் எஞ்சின் வைக்கப்பட்டுள்ளதோடு, கோவை ரயில் நிலையத்தின் முன்புறம் 10 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், அங்கு இருக்கும் ஆட்டோ நிறுத்தும் இடத்தை காலி செய்யுமாறு ஆட்டோ ஓட்டுனர்களை ரயில்வே நிர்வாகம் கோரியுள்ளது.



ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவால் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதாகவும், ரயில் நிலையத்திற்குள் வாடகை கார்களுக்கு நிறுத்த இடம் கொடுத்திருப்பது போல் ஆட்டோக்களை நிறுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தற்போது கோவை ரயில் நிலையத்தின் முகப்பில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் எஞ்சினின் முன்புறம் ஆட்டோக்களை நிறுத்திய ஓட்டுநர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...