கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அ.கணபதி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கி வைத்தார்.


அதனைத்தொடர்ந்து புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கைச்சான்று, வேளாண்மைத்துறையின் மூலம் தென்னை மறுநடவு மற்றும் புத்துணர்வு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.3.25 லட்சம் மதிப்பில் மானியத்துடன் தென்னைக்கன்று, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 6 பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரி வாசு, மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் (பொ) கலா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



அதனைத்தொடர்ந்து புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கைச்சான்று, வேளாண்மைத்துறையின் மூலம் தென்னை மறுநடவு மற்றும் புத்துணர்வு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.3.25 லட்சம் மதிப்பில் மானியத்துடன் தென்னைக்கன்று, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 6 பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரி வாசு, மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் (பொ) கலா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
