டாக்டர் மோகன்’ஸ் டயாபிடிஸ் ஸ்பெஷாலிட்டி செண்டரில் ஆரோக்கிய உணவு சமையல் போட்டி

சர்க்கரை எனப்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் சல்ல சமநிலையிலான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் முக்கியமானதாகும். இந்த உணவு சிறப்பு உணவு என்றும், சர்க்கரை நோயாளிகள் மட்டுமே சாப்பிட முடியும், இது மிகவும் சாதுவான சாப்பிடுவதற்கு போரடிக்கக்கூடியது என்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு குறித்து தவறான கருத்துக்கள் நிலவுகிறது.

டாக்டர் மோகன் டயாயிடிஸ் ஸ்பெஷாலிட்டி செண்டர், இந்தத் தவறான கருத்தை புறந்தள்ளுகிறது என்பதுடன், வாயில் எச்சில் ஊரக்கூடிய உணவுவகைகளை தயாரிப்பது என்றும் இது ஆரோக்கியமானது மட்டும் இன்றி தயாரிப்பது எவ்வளவு சுலபமானது என்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்றது என்றும் விளக்குகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சமைப்பது என்ற சிறப்பு சமையல் விளக்க நிகழ்ச்சி ஆகஸ்ட் 6ம் தேதி (இன்று) கோவை, அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவாரி ஸ்ரீமத் கட்டிடத்தில் உள்ள மோகன்ஸ் ஸ்பெஷாலிடி டயாபிடிஸ் செண்டரில் நோயாளிகள் மற்றும் நுகர்வோருக்காக நடத்தியது.



சமையல் கலைஞர் திருமதி மது வாத்வா, ஃபிளேக்ஸ் அடை, சென்னா மஷ்ரூம் சல்மா, ஸ்பிரௌட் சப்பாத்தி, டோஃபு சட்னி, உள்ளிட்ட எட்டு வகையான உணவு வகைகள் குறித்த செயல்விளக்கத்தை செய்து காட்டினார். இந்த உணவு வகைகள் தயாரிப்பதற்கு குறைவான நேரமே ஆகும் என்பதால் இவற்றை வீடுகளில் அன்றாடம் தயாரிக்கலாம்.

டாக்டர் மோகன்ஸ் ஸ்பெஷலிட்டி டயாபிடிஸ் மையத்தின் ஆலோச௧ர் டாக்டர் ரவி கண்ணன் கூறுகையில், “டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் அவர்கள் தாங்கள் பெறும் சிகிச்சை மற்றும் உட்கொள்ளும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு அப்பாற்பட்டு, அவர்கள் உட்கொள்ளும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். நீரிழிவை நிர்வகிப்பதில் உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகிகிறது எனப்தால் இதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த செயல்விளக்க நிகழ்ச்சியானது சர்க்கரை நோயாளிகள் மற்றும் நுகர்வோரை கருத்தில் கண்டு நடத்தப்பட்டது, ஏனெனில் அவர்களில் பலர், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவை வீட்டிலேயே தயாரிப்பது குறித்து அடிக்கடி கேட்கின்றனர்” என்றார்.

சமையல் கலைஞரான மது வாத்வா, “சர்க்கரை நோயாளிகளுக்கான உண்வு என்பது பொதுவாக போரடிப்பதாக கருதப்படுவதுடன், தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருப்பதுடன் தயாரிப்பதற்கு கடினமாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் சமைக்கும் முறை, பயன்படுத்ப்படும் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை பொருத்ததாகும் என நான் வலிமையாக நம்புகிறேன். இங்கு செய்து காண்பிக்கப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியமானவை, சுவையானவை மற்றும் தயாரிப்பதற்கு எளிதானவை. நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமாகும்” என்றார்.

பல்வேறு நுகர்வோர் மற்றும் நோயாளிகள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு வகைகள் பற்றித் தெரிந்து கொண்டனர்.

Newsletter

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...