வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் தொடா்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வால்பாறை சிலோன்காலனி பகுதியில் இன்று அதிகாலையில் செல்வம் என்பவரின் வீட்டில் அருகில் சிறுத்தை புலி ஒன்று ஆட்டை அடித்து குதறியது. இறந்த நிலையில் கிடந்த ஆட்டை கண்டு செல்வம் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால், அப்பகுதி பொதுமக்கள் வெளியில் வருவதற்கு அஞ்சுகின்றனர். எனவே, கூண்டு வைத்து நடமாடும் அந்த சிறுத்தை புலியை பிடிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.