கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று டெங்கு காய்ச்சல்க்கு இருவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்மூர்த்தி (43) டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளான இவர் கோவை அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று கிருஷ்ணமூர்த்தி பலியானார்.
இதேபோல், பொள்ளாச்சியை சேர்ந்த புஷ்பலதா (28) என்பவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை புஷ்பலதா பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த இரண்டு மதங்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19-ஐ தொட்டுள்ளது.
இச்சம்பவத்தால் பீதியடைந்துள்ள கோவை மக்கள் மாவட்ட நிர்வாகம் டெங்குவை கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்மூர்த்தி (43) டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளான இவர் கோவை அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று கிருஷ்ணமூர்த்தி பலியானார்.
இதேபோல், பொள்ளாச்சியை சேர்ந்த புஷ்பலதா (28) என்பவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை புஷ்பலதா பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த இரண்டு மதங்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19-ஐ தொட்டுள்ளது.
இச்சம்பவத்தால் பீதியடைந்துள்ள கோவை மக்கள் மாவட்ட நிர்வாகம் டெங்குவை கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.