கோவையில் டெங்குவுக்கு மேலும் இருவர் பலி : 2 மாதங்களில் 19 பேர் பலியான பரிதாபம்

கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று டெங்கு காய்ச்சல்க்கு இருவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்மூர்த்தி (43) டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளான இவர் கோவை அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று கிருஷ்ணமூர்த்தி பலியானார். 

இதேபோல், பொள்ளாச்சியை சேர்ந்த புஷ்பலதா (28) என்பவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை புஷ்பலதா பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த இரண்டு மதங்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19-ஐ தொட்டுள்ளது. 

இச்சம்பவத்தால் பீதியடைந்துள்ள கோவை மக்கள் மாவட்ட நிர்வாகம் டெங்குவை கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...