ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கூட்டம்

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூட்டம் இன்று வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி பேசுகையில், உழவர் சந்தைக்கான அடையாள அட்டை பெறுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை உழவர் சந்தையின் மூலம் விற்பனை செய்ய கேட்டுக்கொண்டார்.

உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு எழும் பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் மருதாசல மூர்த்தி, வேலுநாயக்கர், ராமசாமி, சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர். அதற்கான தீர்வு முறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



தொடர்ந்து, விவசாயிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கவும் நிர்வாக இடர்பாடுகளை களையவும் புகார் பெட்டி வைக்க அலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், வேளாண்மை அலுவலர் த.கண்ணன், நிர்வாக அலுவலர் கு.அன்னபூரணி மற்றும் உதவி நிர்வாக அலுவலர்கள் ராஜசேகரன், கவிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...